RSS

இடுக்கண் கழைந்த நட்பு.



அயோத்யா காண்டம் - குகப்படலத்தில் ஓர் செய்தியை  முன்வைக்கிறார் கம்பர். குகனுடைய நட்பை-அன்பை ராமபிரான் பெறுவதும், ராமனுடைய தெய்வ தரிசனத்தை முற்பிறப்பின் பயனாக குகன் கண்டு கொள்வதும், ராமனுடைய திருவடிப் பெருமையைக் குறிப்பிடுவதும்தான்  இப்படலத்தின் சாரம் தனிச்சிறப்பு ஆகும்.
 .
 தனக்குத் துன்பம் வந்த காலத்தில் உற்ற நண்பனை அடைந்தவன்தான்  இராமர். நல்லதொரு காலத்தே மிகச்சிறந்த நண்பனின் இயல்புகளை அளந்து பார்க்கக்கூடிய அளவுகோலாக  ராமனுக்குக் குகன் உதவினான் என்பதைக் கம்பர் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
 .
முருகப் பெருமானுக்குக் "குகன்' என்ற ஒரு பெயர் இருப்பதுபோல இராமாயணத்தில் வரும் குகனின்  பிறப்புக்கும் ஒரு புராணக் கதையுண்டு.

இராமபிரானைப் பார்க்காமலேயே அவரது குணங்களைக் கேட்டறிந்து, அதன் காரணமாக அவர்மீது பேரன்பு கொண்டு வாழ்ந்த வேடன்தான் குகன்.  "பில்' எனும் மலைஜாதி இனத்தவரின் தலைவனான குகன். முரட்டு குணமும், மாமிசம் உண்ணும்  பழக்கமும், பார்க்கவே அருவருக்கத்தக்க உருவம் கொண்டவனாக ஒரு காட்டுப் பகுதியில் குகன் வாழ்ந்து வந்தான். எனதருமை நண்பனே!'' என்று ராமபிரான் கட்டித் தழுவினார் என்றால் - இராமனின் அன்பும், நட்பும், திருவடிப் பேறும் குகனுக்கு வாய்த்திருக்கிறதென்றால், அவன் முற்பிறப்பில் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்! அந்தப் புண்ணியத்தையும் குகனின் முற்பிறப்புப் பற்றிய வரலாறுமே இந்தச் சிறிய ஆய்வாகும்.
.
ஆன்மாக்களைப் புனிதமாக்கும் புண்ணிய நதி கங்கை. அந்தக் கங்கைக் கரையில் ஓர் அந்தண குலத்தைச் சேர்ந்த முனிவர் தவம் செய்துவந்தார். அவருக்கு ஏழு வயதில் ஒரு புதல்வன் இருந்தான். வேதங்களைக் ஐயந்திரிபுறக் கற்று அன்பும் பண்பும் அடக்கமும் கொண்டு அந்தச் சிறுவன் வளர்ந்து வந்தான்.  ஒருநாள் தந்தையைப் பார்த்து தெய்வங்களுக்குள் சிறந்த தெய்வம் எது?'' என்று கேட்டான்.
 .
மகனே! நமது உடம்பின் உச்சியில் இருப்பது சிகை. வேதங்களின் முடிந்த முடிவாக உள்ளதும் உபநிடதம் அதர்வ சிகை. அதுபோல் தெய்வங்களின் தனிப்பெருந் தலைவர் முருகவேள். முருகன், மூவர் தேவாதி தேவர்கள் போற்றும் முழுமுதற் கடவுள். மறையாயிரங்களும் போற்றும் மகாதேவன். முருகனை வணங்கினால் எல்லா மூர்த்திகளையும் வணங்கியதற்கு ஒப்பாகும். அவன் கருணைக் கடல்; குணநிதி. முருகனை வழிபாடு செய்தோர், பிறவிப் பெருங்கடலைக் கடப்பர்; முக்தி பெறுவர்'' என்று முருகன் பெருமையை மகனுக்குக் கூறினார்.

 ஒரு நாள் முனிவர் கேதாரம் வரை வெளியில் சென்றிருந்தார். அவர் திரும்பிவரும்வரை முனிவரின்  மைந்தன் ஆசிரமத்தில் இருந்து, முருகன் திருவடிகளைத் சரிசித்துக்  கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மன்னன் ஒருவன், முனிவர் இல்லாததைக் கண்டு மன வருத்தத்துடன் திரும்பி நாடுசெல்ல நினைத்தான். அவ்வாறு திரும்பிய மன்னனைப் பார்த்து,
 .
 வேந்தே! நீர் என்ன காரணமாக வந்தீர்? உமக்கு என்ன கவலை? என்னைச் சிறுவன் என்று எண்ண வேண்டாம். ஓர் இருள் சூழ்ந்த வீட்டில் சிறுவன் ஒருவன் விளக்கை எடுத்துச் சென்றால், இருள் விலகத்தானே செய்யும்? சிறுவன்தானே என்று இருள் அலட்சியமாக எண்ணுமா? விளக்குதானே முக்கியம்! அதுபோல, நான் சிறுவனாக இருப்பினும் என்னிடம் "ஞானதீபம்' இருக்கிறது. உமது அறியாமையாகிய இருளை நான் அகற்றுவேன்'' என்றான் முனிவரின் மைந்தன்.
 .
 மன்னன் மகிழ்ந்து, ""குழந்தாய்! நான் இந்த நாட்டை ஆளும் மன்னன். வேட்டையாடியபோது குறிதவறி, நான் விட்ட அம்பு ஒரு முனிவரைக் கொன்றுவிட்டது. அதனால், பிரமஹத்தி (தோஷம்) தொடர்ந்து என்னை வருத்துகின்றது இதற்கு நிவாரணத்தை நாடி வந்தேன்'' என்றான்.

 வேந்தர் பெருமானே! இவ்வளவுதானா! நீங்கள் இந்தப் புனிதமான கங்கையில் மூழ்கி, வடதிசை நோக்கி நின்று, ஒரு மனதுடன், "ஓம் முருகா' என்று மூன்று முறை கூறுங்கள் உங்களைப் பிடித்திருக்கும் பிரமஹத்தி உடனே அகலும்'' என்றான்.

 மன்னனும் அவ்வாறே செய்து, பிரமஹத்தி நீங்கப்பெற்று, முனிவர் மைந்தனைப் பணிந்து, வினை நீங்கி மகிழ்ச்சியாக தன் நகரம் திரும்பினான்.

 முனிவர், சில நாள்களுக்குப் பின் தமது குடிசைக்கு வந்தார். தன் தந்தையைப் பணிந்தான் மகன். முனிவர் தன் மகனைப் பார்த்து, ""மகனே! இங்கே தேர்ச் சக்கரத்தின் சுவடுகள் காணப்படுகிறதே, வந்தது யார்?'' என்று கேட்டார்.

 "தந்தையே! இந்நாட்டு மன்னன் பிரமஹத்தி நீக்கம் பெறுவதற்காகத் தங்களைக் காண வந்தார். அதற்குரிய நிவாரணத்தை நானே கூறினேன். மன்னன் நான் கூறியபடி செய்து, பாவம் நீங்கித் துன்பம் அகன்று மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்'' என்றான்.

 முனிவர் பெரிதும் மகிழ்ந்து, ""மகனே! வந்தவருக்கு ஆறுதல் கூறி உதவி செய்தாயே, இதுதான் பண்பாடு. அவருக்கு நீ என்ன பரிகாரம் கூறினாய்?''  என்று கேட்டார்.

 "தந்தையே! பிரமஹத்தி விலக - கங்கையில் மூழ்கி, ஒருமனத்துடன் "ஓம் முருகா' என்று மும்முறை கூறுங்கள் என்றேன்''.

இதைக்கேட்ட முனிவருக்குக் கடுங்கோபம் பொங்கி எழுந்தது. "மூடனே! நீ என் மகனா? என்ன காரியம் செய்துவிட்டாய்? உனக்கு முருகன் பெருமை தெரியவில்லையே? ஒருமுறை "முருகா' என்று கூறினாலே ஆயிரம் பிரமஹத்திகள் அகலுமே... ஆனால் நீயோ, ஒரு பிரமஹத்தி விலக மூன்று முறை "முருகா' என்று கூறுமாறு கூறியுள்ளாயே! இது முறையோ? நீ முருக மந்திரத்தின் பெருமையை நன்கு உணரவில்லையே! ஆதலால், நீ வேடனாகப் பிறப்பாயாக!'' என்று மகனைச் சபித்தார் முனிவர்.

 தந்தையைப் பலமுறை வேண்டிப் பணிந்து, தன் பிழை பொறுக்குமாறு மகன் வேண்டினான்.

 முனிவர் சினம் தணிந்து, ""மகனே! புனிதமான இதக் கங்கைக் கரையில் நீ வேடர் குலத்தில் பிறப்பாய்! வேடனாகப் பிறந்தாலும், "முருகன்' நாமமாகிய "குகன்' என்ற பெயருடன் விளங்குவாய். நற்குண சீலனாக இருப்பாய். இக்கங்கைக் கரைக்கு ராமபிரான் அவதாரம் எடுத்து வரும் சமயம், ராமபிரானுக்கு உற்ற-உயிர் நண்பனாகி, அவர் பாதம் பணிந்து, அவரது அருளுக்குப் பாத்திரமாகி பிறவிப்பயன் பெறுவாய்!'' என்று சாப விமோசனமும் கூறினார்.

 அந்த முனிவரின்  மைந்தன்தான் கங்கைக் கரையில் "சிருங்கிபேரம்' என்ற ஊரில் வேடனாகப் பிறந்து, "குகன்' என்ற பெயருடன் வாழ்ந்து  ராமச்சந்திர மூர்த்திக்கு உயிர்த் தோழனாகி சசாபவிமோசனம்  பெற்ற குகப்பெருமாள்! இதுதான் குகனின் முற்பிறவி வரலாறு. முருகப் பெருமானைப் போற்றியதால் கிடைத்த பெரும்பேறு!

 காரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பதை நிரூபிப்பவைதான் நமது இந்து இதிகாசங்களும் புராணங்களும் காப்பியங்களுமாகும்.

கம்பர் கூறிய குகப்படலத்தின் சாரம் இதுதான்:- எத்தனை இழிந்த பிறவியாக இருந்தாலும்கூட, இறைவனிடத்தில் தூயபக்தி இருக்குமானால் - கள்ளங் கபடமற்ற அன்பிருக்குமானால், அவன் இறைவனின் திருவடியை அடைந்து அவரது அருளுக்குப் பாத்திரமாகிப் பேரின்பப் பெருநிலையை அடைய முடியும் என்பதற்குக் குகனும் ஒரு உதாரண புருசனாவார். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பழமை

காரைக்குடிக்குச் சென்று முத்தையா என்று யாராவது இருந்தார்களா என்று கேட்டுப் பாருங்கள். அப்படி இங்கு ஒருவரும் இருக்கவில்லை என்று உடனே பதில் வரும். ஆனால் கவிஞர் கண்ணதாசனைத் தெரியுமா என்று அதே இடத்தில் திரும்பவும் கேட்டுப்பார்த்தால்; ஆம் அவர் எங்கள் காரைக்குடியில் தான் பிறந்தவர் என்று பதில் வரும்.  பிரபலமான கவிஞர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் காப்பி அடிப்பவர்கள் என்று;  எழுத்தாளர் சுஜாதா கண்ணதாசன் அவர்களையும் வாலி அவர்களையும் தாக்கி இருந்ததை நான் படித்திருக்கிறேன். அதை உண்மை என்று வாதிட எனக்கு அறிவு இருக்கிறதா என்று பலமுறை சிந்தித்துப் துப் பார்த்தேன்.  ஒன்றில்லாமல் மற்றென்று உருவாகுமா எனற தத்துவ உண்மையைச் சொன்னவர் கண்ணதாசன்.  தான் அனுபவித்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற முறையிலும் பல பாடல்களை எழுதி மக்கள் மனங்களில் அந்தப் பாடல்களை நிலைபெறச் செய்தவர்.
.
ஒருமுறை மன உலைச்சலுடன் திருப்பதிக்குச் சென்று திரும்பும் வழியில் அவரது கடன் தொல்லைகள் தீருவதற்குற் ஒரு வழிவந்துவிட்டது என்று திரு M.S.V யிடம் இருந்து தகவல் வந்தது. அன்று கண்ணதாசனுக்குப் பிறந்த பாடல்தான் "திருப்பதி சென்று திரும்பிவந்தால் ஓர் திருப்பம் நேருமடா" என்ற பாடலாகும்.
.
ஒரு சந்தர்ப்பத்தில் மது வாங்குவதற்காகத் தன் அண்ணனிடம் காசு கேட்டிருக்கிறார் அப்போது அவருக்கு காசு கிடைக்கவிர்லை.  அறிவுரைகளே வழங்கப்பட்டன. அதனால் மனமுடைந்த கண்ணதாசன் ஒரு பாட்டு எழுதினார். அந்தப் பாடல்தான் "அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே" என்ற பாடலாகும்.
.
திரு MSV அவர்கள் மே மாதம் முழுக்க ஒரு படத்திற்கான பாடலை இசையமைக்கத் திட்டம் இட்டிருந்தார். அதற்காகவே கண்ணதாசன் ஒரு பாட்டில் கடைசிச் சொற்கள் "மே" என்று முடிவதாக ஒரு பாடலை எழுதினார். அந்தப் பாடல்தான் "அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமே" என்ற பாடலாகும்.
.
ஒரு நாள் தொழிலில் அக்கறை இல்லாமல் தூங்கிவிட்டார் MSV என்பதற்காகவே "அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ" என்ற பாடலை எழுதினார்.
.
திரு கண்ணமாசன் அவர்கள் அறிஞர் அண்ணாத்துரை அவர்களுடன் ஒரு தூய நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் அண்ணாவின் அரசியல் கொள்கைகளின் கருத்து வேற்றுமையால் சிறிதுகாலம் அவரைவிட்டுப் பிரிந்திருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணா அவர்களுக்குப் புற்றுநோய் கண்டது. மனமுடைந்த கவிஞர் "நலம்தானா நலம்தானா என்று பாடலை அவருக்காக எழுதி அதில் "புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பண்பட்ட பாட்டை யாரறிவார்"  என்ற வரிகளையும் சேர்த்திருந்தார். பாடலைக் கேட்காமலே அண்ணா அவர்கள் இறந்துவிட்டார். பிற்காலத்தில் தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக அந்தப்பாடலில் "புண்பட்டதால் உந்தன் மேனியிலே இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்" என்று மாற்றி அமைத்திருந்தார். இவ்வாறு பல பாடல்களைச் சந்தர்ப்பங்களுக்காக எழுதி பதிவுசெய்த பெருமை திரு கண்ணதாசன் அவர்களையே சாரும். தனது வசந்தகாலம் என்ற சுயசரிதையில் தனக்கு ஒரு காதலி இருந்ததாகவும் அவள் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது ஒரு பாடல் தனக்காக எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால்தான் "காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலை எழுதி இறுதியில் கவிஞன் ஆக்கிளாள் என்னை என்று முடித்திரிந்தார்.
.
இது இவ்வாறிருக்க இலக்கியங்களில் உள்ள கருத்துக்களைத் தோண்டி எடுத்து படித்தவர்களுக்கும் பாமர மக்களுக்கும் விளங்கவைப்பதில் கண்ணதாசன் மிகவும் ஆழுமை பெற்றவராக இருந்தார். ஒரு காலப்பகுதியில் இலக்கியத்துள் எழுந்த கருத்துக்களை மீண்டும் தமிழ் இலக்கியத்தில் கூறுவதைக் "கூறியது கூறுதல்" அல்லது "பழமை பேணும்பண்பு" என்று அழைப்பர். இவ்வாறான நடவடிக்கை சமூகத்தின் தேவைகருதிய ஒரு கவிஞனின் கடமை ஆகிறதே தவிர காப்பி அடித்துல் என்று ஒருவரும் சொல்லுவதில்லை. கவிஞர்கள் இல்லாவிட்டால் காப்பியங்களின் கருப்பொருட்களுக்கு எப்பவோ விலங்கு பூடப்பட்டிருக்கும். இவ்வாறு இலக்கியப் பொருட்களைக் கண்ணதாசன் அவர்கள் பல பாடல்களில் புகுத்தியிருந்தாலும் இரண்டு உதாரணங்களை இங்கு வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறேன்.
.
திருக்குறளில் "நான் நோக்க நிலம் நோக்கும் என்ற அடிகளின் பொருளைத்தான் கண்ணதாசன் அவரது பாணியில் "உன்னை  நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தாபோகும்" என்று பதிவு செய்தார்.  
.
ஒரு காலத்தில் "வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரையாரோ என்ற பாடல் காலத்தால் அளிக்கமுடியாத தத்துவப் பாடலாகும். பாதகாணிக்கை என்ற படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னரே இசையமைத்திருந்தார். இது பட்டினத்தார் பாடிய ஒரு பாடலின் வரிகள்தான் என்றால் அதைத் தெரியாதவர்கள் நம்பமாட்டார்கள். இதோ அந்தப் பாடல்.
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே (வீடுவரை உறவு)
விழியம்பு ஒழுக மெத்திய மாந்தரும் வீதிமட்டே (வீதிவரை மனைவி)
இரு கைத்தலைமேல் வைத்து அழுமைந்தரும் காடுமட்டே (காடுவரை பிள்ளை)
பற்றித் தொடரும் இருவினை பாவ புண்ணியமே..
.
இதில் கடைசிவரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் "கடைசிவரை கூட வருவது செய்த பாவமும் புண்ணியமுமே என்ற கருத்தைத் தனது பாடலில் குறிப்பிடவில்லை. அவரது நண்பர் ஒருவர் இதை ஏன் உங்கள் பாடலில் குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு கண்ணதாசன் "இப்படியொரு புனிதமான கருத்தைச் சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு" என்று பதிலளித்திருந்தாராம்.
.
இந்தப் பாடலின் பொருளைக் கண்ணதாசன் அவர்கள் வெளியில் கொண்டுவராமல் இருந்திருந்தால் இவ்வாறான தத்துவ முத்துக்களை நாம் அறியாமலே அழிந்திருக்கும் என்பதுவே உண்மையாகிறது. திரு M.S.V அவர்களை நான் சுவிசில் சந்தித்தபோது ஒரு பத்திரிகை ஆசிரியராக அவரைப் பேட்டி காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவரிடம் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிக் கேட்டபோது என் தம்பி என்று கண்கலங்கியவர்; இறுதியில் பல விசயங்கள் கூறியதன் பின்னர் "கண்ணதாசன் தனது வாழ்வில் நின்மதி இல்லாமல் இருந்து எழுதிய பாடல்களைத்தான் நீங்கள் நின்மதியாக இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்" என்று பதிலளித்தார். கண்ணதாசன் காப்பி அடித்தார் என்ற எழுத்தாளர் சுஜாதாவின் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதற்காகவே இதை எழுதும் முனைப்பு எனக்குக் கிடைத்தது. நன்றி நண்பர்களே.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ரா...ரா....


சிவபூமி இது சித்தர்களில் ஒருவரான திருமூலரின் இலங்கையைப் பற்றியகூற்றாகும்.  இதற்குக் காரணம் இலங்கையில் சிவனை வழிபடும் மக்கள் ஆதிகாலம் தொட்டு வாழ்ந்தார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். "இராவணன் மேலது நீறு! எண்ணத்தகுவது நீறு" இது திருநீற்றின் பெருமைக்கு இராவணனும்  ஒரு காரணம் என்பதைத் திருஞானசம்பந்தர் வாயிலாக நாம் அறிந்த உண்மையாகும். கம்பரின் காமன் என்ற சொல்லை மாற்றிக் கருணைஉளம் கொண்ட கலைஞனாக இராவணனைப்  பார்த்தவர் சம்பந்தராவார். ஒருவன் கதாநாயகனாக வரவேண்டுமானால் அதே கதையில் ஒருவனை வில்லனாக நடிக்கவைக்கவேண்டும் என்பது காப்பியங்களின் பண்பு.  இராவணன் நடித்தாரா நடிக்க வைக்கப்பட்டாரா என்பதில்தான் குழப்பங்கள்.
.
இராவணனுக்கு எப்பவும் தொடாமல் தூக்கும் பழக்கம் இருந்தது. தாய் சிவபக்தை தன்  வயதான காலத்தில் சிவன்கோவிலுக்குச் சென்று வணங்கமுடியாது என்பதால் இராவணன் சிவனை மலையுடன் சேர்த்துத் தாய்க்காகத் தூக்கியவர். அதேபோல் சீதையைத் தொடாமல் தூக்குவதற்கும் பல காரணங்கள்  இருந்ததன. அவை என்னவென்று காண்பதில்தான் குழப்பம். இராவணனுக்கு இரண்டு தங்கைகள் இருந்தார்கள். இது தணிக்கை செய்யப்பட்ட ஒரு கதை. ஒருவர் பெயர் யாவா; மற்றவர் பெயர் சுமத்திரா. இந்த இரு தங்கையருக்கும் அவர்கள் பெயரில் சீதனம் கொடுக்கப்பட்ட இடம்தான் இந்தோனேசியாவில் இருக்கும் யாவா; சுமத்திரா. இராவணனது ராச்சியம் தென்னிழக்காசியாவில் பரந்து இலங்கையைத் தலைநகராகக் கொண்டு திகழ்ந்தது என்பதற்கு இதுவே போதுமானதாகும். இடையில் ஒரு காமடி.
.
இராமாயணத்தில் இராமரினதும் சீதையினதும்  வயது குறிப்பிடப்படுகிறது. ஆரண்ய காண்டத்தில் சீதையை இராவணன் தூக்கிச் செல்லும்போது அவளுக்கு வயது 18 என்று சொல்கிறார்கள். சீதை அசோகவனத்தில் அனுமானைப் பார்க்கும்போது   இராமரோடு அயோத்தியைவிட்டுக் காட்டிற்கு வந்து 12 வருடங்கள் வாழ்ந்ததாகச் சொல்கிறாள். அப்படி என்றால் உப்பரிக்கையில் இருந்து சீதை இராமரை விசுவாமித்திரரோடு பார்த்தபோது அவளுக்கு வயது 6. இந்த 6 வயதுக் குழந்தை பார்த்ததையா கம்பர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றும்; தோள் கண்டார் தோளே கண்டார் என்றும் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது.


அழைப்பின் பெயரில் சிவனிடம் கைலைமலைக்குச் சென்ற இராவணன் சகல வல்லமைகளும் பெற்றுத்திரும்பும் வழியில் வானத்தில் உமாதேவியார் இராவணன்முன் தோன்றகிறார். என்னிடமும் சில வரங்களை வாங்கிச் செல் மகனே என்று உமாதேவியார் சொல்கிறார். சிரித்துவிட்ட இராவணன் கடலுக்கே உப்பா என்ற பாணியில் சிவனைவிட இந்த உலகத்தில் ஒருவரும் எனக்குப் பெரிதில்லை. உனது வரத்தை நீயே வைத்துக்கொள் என்று சொல்லிப் பயணத்தைத் தொடர்கிறான். ஆத்திரம் அடைந்த தேவியார் இராவணனுக்கு "உன்னை ஒரு பெண்ணாலே அழித்துக் காட்டுகிறேன்" என்று சபதம் இடுகிறார். இராவணன் போடி என்று மகத்திற்குள் சொல்லி நாடு திரும்புகிறான்.
.
இராவணனுக்கு முதலாவதாகப் பெண்குழந்தை பிறக்கிறது. உமாதேவியாரின் சாபத்தை நினைத்துத் தன்னுள் பயந்த இராவணன் அந்தக் குழந்தையை யனகரின் வயலில் கொண்டு சென்று விடுகிறான். யனகர் அந்தக் குழந்தையை எடுத்துச் சீதை என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

இராமருடன் காட்டுக்குச் சென்ற சீதை அங்கு துன்பப்படுவதை ஒரு தகப்பனால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாமல் சீதையைத் தூக்கிச் சென்று அசோகவனத்தில் பாதுகாப்பாக வைக்கிறான் இராவணன். வால்மீகிககு இது தெரிந்திருந்தும் வித்தியாசமான போக்கில் கதையை வணக்கம் வரை கொண்டு செல்கிறார்.
.
இராவணனுக்கு ஒரு மகனும் இருந்தான் அவன் பெயர் இந்திரசித்து.  சீதை சகோதரி என்ற விடையம் இந்திரசித்துக்குத் தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடி உல்லாசமாக வாழும் இந்திரசித்து சீதையின் அழகைக்கண்டு கவர்ந்து பாலியல் வன்முறை செய்து விட்டால் குலத்திற்கே நாசம் என்பதை எண்ணிய இராவணன் சீதையைத் தூக்கி அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்திருக்கலாம் என்பதற்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
.
இராவணன் ஒரு பெண்ணை விருப்பம் இல்லாமல் தொடுவானாக இருந்தால் தலைவெடித்து இறப்பான் என்பது கடவுள் வரங்களில் ஒன்று. அதனால்தான் சீதையைத் தொடாமல் தூக்கினான் என்பதையும் உணரலாம்.  இராவணன் இராமர் வேடம் பூண்டு சீதையைத் தொடாமல் இருந்ததற்கும் இதுவே காரணமாகும். ஆனால் கம்பர் ஒரு ஏகபத்தினி விரதனின் உருவத்தை எடுக்க இராவணனுக்கு விருப்பம் இல்லை என்று கதாநாயகன் புகழ் பாடுகிறார். தலை வெடிக்கும் விடையத்தைச் சீதையும் பணிப்பெண்கள் மூலமாக அறிந்து பயம் தெளிந்து இருந்தாள் என்று வால்மீகி கூறுகிறார். .
.
இராமாயணத்தில் போர்முறைகளுக்கு எதிராக வாலியை இராமர் ஒளித்திருந்து தான் கொன்றார் என்று சொன்னவர்கள் அதுதான் அவரது விதி என்று கணக்கை மூடி இராமரை மீட்கின்றார்கள். எது எப்படி இருப்பினும் இராவணனைக் கொன்றவுடன் இராமர் தனது ஆன்மாவைத் தானே கொன்றேன் என்ற குற்ற உணர்வுக்குள் வந்தார் என்று ஒரு ஞானி கருதுவது சரியாக இருக்கிறது. ஆன்மாக்கள் ஒன்று அவை பலவடிவங்களில் பூமியில் தோன்றுகின்றன என்பது நியதி. உலக வரலாற்றில் ஒரு பெண்ணுக்காக நடந்த பெரிய சண்டையும் பெரிய கொல வெறியும் இதுவாகும். பெரியார் சொன்னதுபோல் இந்தப் புத்தகத்தை ஒழித்திருந்தால் அதற்குப் பிற்பட்டவர்களுக்கு எந்தச் சிக்கலும் வந்திருக்காது. விடிய விடிய இராமர் கதை. விடிந்தால் சீதை இராமருக்கு என்னமுறை. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கற்பரசன்

அனைவருக்கும் வணகக்கம் நீண்ட நாட்களின் பின் என் இனிய தோழமைகளைச் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்.

படத்தில் கண்ணன் இத்தாலி நாட்டுப் பெண்களுடன் Sபெயின் நாட்டுக் கடற்கரையில் நிற்பதாக நினைத்து விடவேண்டாம். அவரைச் சுற்றி நிற்பவர்கள் எல்லாம் முற்பிறவியில் முனிவர்களாக இருந்து பெண்களாகப் பூமியில் வந்து பிறந்தவர்கள்.
.
அதிகமானவர்களுக்கு இராமனும் கண்ணனும் அவதார புருசர்கள் என்று தெரியும். ஆனால் இராம அவதாரமா கண்ணனன் அவதாரமா முதல் வந்தது என்பதில் சந்தேகம் உண்டு. இரண்டுபேரும் காவிய நாயகர்களாகச் சிததரிக்கப் பட்டுள்ளார்கள். இரண்டு காவியங்களையும் இதிகாசங்கள் என்று அழைப்பர் ஆன்றோர்கள். தேவாரம் திருவாசகம் எழுகின்ற காலங்களுக்கு முதல் ஆலயங்களில் இவை பாராயணம் என்ற வடிவத்தில் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. தமிழ் இலக்கியத்தில் ஒரு பாடல்.
"அன்று இலங்கை பொருதழித்த அவனே அந்தப் பாரதப் போர் முடித்து வென்றிலங்கு கதிராளி விசயதரன் என உதித்தான்" என்ற பாடல் இருக்கின்றது.

இதன் அடிப்படைடயில் அன்று இலங்கை பொருதழித்தான் என்பதில் இராமன் இலங்கையுடன் சண்டைபிடித்தான் என்ற கருத்து வருகிறது. அவனே அந்தப் பாரதப் போர் முடித்து என்பதில் இராமன்தான மீண்டும் கண்ணனாக அவதாரம் எடுத்தான் என்ற பொருள் வருகிறது. இந்தப் பாடலின் பொருள் விளக்கத்தில் இராமனுக்குப் பின்னரே கண்ணன் அவதாரம் நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தப் பாடலும் விசயதரன் என்ற சோழச் சக்கரவர்த்தி ஒரு கடவுள் அவதாரமாகக் காட்டப் படுவதற்காகச் சோழர்  காலத்ததில் எழுந்த பாடலாகும. கீழே வரும் கதைப்போக்கிற்கு இந்தப் பாடல் முக்கியமானதாககும். சோழர் காலத்தில் அரசனைத் தெய்வமாக மதிக்கும் பண்பு இருந்தது.

பாரதப்போரின் உச்சக் கட்டம் துரோணரும் துரியோதனனும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கருவைக் கலைத்துப் பாண்டவர்களை வேருடன் அழிக்க எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது அபிமன்யு மனைவி உத்தரையின் வயிற்றைத் தாக்கி  உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.
.
இதிலிருந்து அவளைக் காப்பாற்ற ஒரு யோசனை சொல்லப்பட்டது. அவளது வயிற்றைப்  பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும். ஆனால் அவளது வயிற்றைத் தடவப் பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பிரபலமாக இருந்த பெரிய முனிவர்களும் பிரமச்சாரிகளும் தங்கள் நிலையில் தவறி இருந்தார்கள் என்பதுவே நிரூபணமாகிறது. ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவித் திரிந்த கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவி வலிபோக்கி உயிர்காக்க முன்வந்தான. இதனால் பிரம்மாஸ்திரக் கட்டு விலகி உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் கண்ணனால் காப்பாற்றப்பட்டன. இங்குதான் திரைவிலகிக் காட்சி மாறுகிறது. கிருஷ்ணன் எப்படிப் பிரம்மச்சாரி ஆவாரர் என்ற கேள்வியே எல்லோர் மனதிலும்  வியப்பாக எழுகிறது. புராணங்களின் குட்டு மீண்டும் மீண்டும் உடைக்கப் படுவததற்கு இந்தச் சம்பவம் ஓரு காரணம் என்று மக்கள் கருதலாம்.
.
இராம அவதார காலத்தில் தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர். (முனிவர்கள் போயும் போயும் ஒரு ஆணைணப் பார்த்து மயங்கினர் என்றால் பெண்ணைப் பார்த்திருநந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை) தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். இதனைக் கம்பர்  ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’ என்று கூறுகிறார். இதனால்  ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்து தாங்கள் முற்பிறப்பில் விரும்பியபடி கண்ணனைக் கட்டித் தழுவி மகிழ்ந்தனர். ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை. (இதனை நான் சொல்லவில்லை புராணம் சொல்கிறது) அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.
.
நாம் படிப்பதற்குக் கீதை எனும் பாடம் தந்தான் என்பதில் மகிழும் கண்ணதாசன் "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்பதிலும அர்த்தம் இருப்பதாக நான் கருதுதுகிறேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS